வருத்தம்

உன் விழியோடு வழியும்
சிறு தூரலும் சில நிமிடம்
என்னைச் சிதறடிக்கும்.

என் செவியை சிறையெடுக்கும்
உன் சிறு அழுகையும்.

அன்பே உன் மனதோடு
எண்ணத்தை கடனாய்
கொடுப்பாயா
உன் வருத்தம் என்னோடு
போகட்டும்
ஏனெனில் என் விழியின்
உனது கண்ணீருக்கு
எனது விரல்கள் பதிலளிக்கும்!

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக