நிலவு

ஒளியை இரவல் வாங்கும்
இரவுப் பெண் நீயே!
வெள்ளிச் சுடரே...

நீ யாரைக் கண்டு
உருகித் தேய்கிறாய்
என்பதை எனக்கு மட்டும்
சொல்லடி...

அவள்
உன் போல்...
என் மனதிற்கு
ஒளியூட்டும்
தேய்தலறியா
பெளர்ணமி
வெளிர் நிலவாய்
நினைவுகளோடு
விளையாடும்
என்னவள் தானென்று.

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக