சிகரம்

மலைச் சிகர
உச்சிக் குளிர்மை
போல்
என் மனமும் சற்றே
அந்நிலை எய்தியது
அன்பெனும் பனிமழையை
நீ எந்தன் மனதோடு
பொழிந்ததனால்

மேலும் மேலும்
குளிர்கிறதே
நெஞ்சுக்குள்
பனிச் சிலையாய்
நீ இருப்பதனால்

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக