கருமேகத் திரை

இமை எனும் இறையை
விழியாகி வணங்கவில்லை
ஏனெனில்
உன்னுடன் நானிருந்த
நாழிகையில்
சிறு கனம் விழியைத்
திரையிட்டு கருமேகக்
கனவாகியது
திரையிட்டது சிறுகனமே
எனினும்
நிலைகுலைந்து துகள்களானேன்

இரவில் மட்டும்
நான் வருந்தவில்லை
நீ என்னுடன் இல்லாமல்
இருப்பதாய் காட்டும்
வெள்ளித் திரையாய்
இமைகள்
கனவுகள் தருவதால் தான்

1 பின்னூட்டங்கள்:

பெயரில்லா சொன்னது…

Nice Creativity da... Simply Superb...

கருத்துரையிடுக