ஒற்றை மரம்

கருங்காடு ஈன்றெடுத்த
ஒற்றைக் கால் பிள்ளையே

உன்னோடு உறவாட
ஒருவன் மட்டும் வருவானே!

வெறுமையும் உருமாறி
இசையாகிப் போவானே
காற்றென்னும் அவனே
உந்தன் காதலனே

ஒற்றைக் கால் சிலையே
நான் உன்னில்
முதிர்ந்த இலையே...

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக