காகிதப்பூ

மலர்ந்த பின்
மண்டியிட்டு மரணத்தைத்
தழுவும் மத்தாப்பு
மகிழ்ச்சியோடு
முகமலர்ந்த மல்லிகைக்கு
நாட்கள் ஒன்று தான்
உன்னை அத்துடன்
உவமைச் சொல்ல
மனமில்லை கண்மணியே
ஏனென்றால் நீ
வாடாத என்னுயிர்
கொண்டு மலர்ந்த
காகிதப்பூ

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக