தேவதை

வானத்து வனதேவதை
தன் முகம் முழுதும்
இளங் குங்குமத்தைத்
தெரித்தார் போல்
சிவந்து நிற்க
காரணம் என்ன?

விடியல் தொட்டு
நீ தெரிக்கும்
வெள்ளி கீற்றுகளால்
சிறுகச் சிறுக
அவள் நாணத்தை
சுட்டதனாலா?
பதில் வேண்டும்
ஆதவனே!

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக