ஆலயம்

உயிரைக் கிழித்து
இரட்டிப்பாக்கி
கருங்காட்டுச் சித்திரத்தை
கருவரையில்
சிலை வடித்தாய்.

சிலை உயிர்
கொண்ட நாளன்று
இன்பங்கள் கோடியாய்
ஊற்றுவிக்கும் மனதின்
கோவில் தன்னில்
தீபத்தை ஏற்கும்
கடவுள் தானே
தாயே நீ!

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக