உன்னைப் பற்றி...

உன்னைப் பற்றி
நான் என்ன சொல்ல...

உயிரை உரித்து
உதிரத்தை உணவாய்
உறிஞ்சும்
உன் பார்வை

இது நாள் வரை
நாம் பேசாத
வார்த்தைகளெல்லாம்
சேர்த்துப் பேசும்
உன் மெளனம்

இது வரை காணாத
திரை மறைவுச்
சித்திரமாய்
என் உருவம் காட்டும்
கருவண்டாய் போன
உன் விழிகள்

நம் நினைவுகள் அனைத்தும்
ஒருங்கே உயர்த்தி
நிழற் படம் காட்டும்
உன் புருவங்கள்

நாம் இருவரும்
ஒன்றெனக் காட்டும்
என் உயிரை விதைத்து
உதித்த குளிர் நிலவு
உன் நுதற் பொட்டு

சொல்வதற்கு வார்த்தைகள்
சிக்கவில்லை

2 பின்னூட்டங்கள்:

அமுதா சொன்னது…

nice one

Nithi... சொன்னது…

இது நாள் வரை
நாம் பேசாத
வார்த்தைகளெல்லாம்
சேர்த்துப் பேசும்
உன் மெளனம்


Nice friend....

கருத்துரையிடுக