காகிதப் பூவில் தேன்

ஈறாரு வருடங்கள்
பொறுத்திருந்து பூக்கும்
குறிஞ்சியும்
உனைக் கண்ட மறுகனம்
நகைத்து முகம் சிவக்கும்

நீ கடக்கும் காரணத்தால்
வழியோரம் வசந்தம் வீசும்
காகிதப் பூவும்
தேன் வடிக்கும்

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக