ஊழியன்

இளஞ்சிவப்பு மண்
புழுதிப் புகைவிட்டு
தழலெறியும் நேரம்,
நெருப்பின் தலைமகன்
தலைச் சுழி நோக்கும்காலம்...

காலணிகளுக்கு இன்று
என் நிழலொடு உறவில்லை
கால்களே நேரிடையாய்
நிழலை முத்தமிட்டுத்
தொடர்கிறது...

கருத்த மேனியனை
எந்தன் பாட்டுடைத் தலைவனை
உப்பு நீர் வார்க்கச் செய்யும்
வேந்தனவன் சூரியனே
உன்னைப் போற்றும்
பெரியவனே
இந்த கருத்த மேனியனே
பாடுபடும் ஊழியனே...

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக