பட்டம்

விடியலின் வேகத்தை
உன்னை நினைகையில்
உணர்கிறேன்...

பறக்கும் பட்டத்தின்
வாலைப் போலத்
துடிக்கிறேன்...

உன்னைத் தொடும்
ஆசையில் தான்
இந்த நடுநிசி இரவிலும்
எந்தன் மனதைப்
பட்டமாக்கிப் பறக்கிறேன்

சேரும் நேரம் வருவதற்குள்
சிரித்து வளர்ந்த நீயோ
இருளண்டித் தேய்கிறாய் நிலவே

நீ தேய்ந்து கொண்டே
மனமிளிரும் தங்கத்தை
உரசிப் பார்ப்பதேன் கண்ணே

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக