கண்ணா

மூங்கிலின் சிறு விரலைத்
துளையிட்டுத் திருகிய
புல்லாங்குழல்
உன் கையில் தான்
இருக்கையில் எத்தனையழகு
அதனினும் அழகு
நிந்தன் வித்தையால்
எழும் உச்சியுந்தி
துளையிட்டுச் சென்று
மெய் எலாம் திருடும்
குறுகிய துளைச் சென்று
குளிர வைக்கும் காற்றினும்
மெல்லிய வருடல் இசை...
இதனை வேறெப்படி
நான் சொல்ல
கார் கண்ணா?

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக