குடும்பம்

ஐயிரண்டுத் திங்கள்
கருக் கல்லை
சிறை வைத்து
உயிரை உளியாக்கி
உடற் சுத்தியலால்
உயிரடித்து
நீ செதுக்கி வெளியுமிழ்ந்த
பேதையொன்று...
ஒருநாள் உனக்குப்
பெயர் சூட்டும்
அம்மா என்று...

உன்
சுட்டு விரல் நீட்டியே
நீ பெற்ற
புதுப்பெயர் போல்
தலைவனவன் பெற
ஈகைக் கொண்டு
பேதைக்கு
நீ காட்டும்
புதிய முகம்
அப்பா...

ஆசை ஆசையாய்
அருகே வந்து
தன் மடியில் பேதையை
தொட்டிலிட வேண்டுமாய்
இச்சைக் கொள்ளும்
சிறு தளிர் கொழுந்து
நீ செதுக்கிய
உயிர் பெற்ற
முதற் சிற்பம்...

1 பின்னூட்டங்கள்:

பெயரில்லா சொன்னது…

good try

கருத்துரையிடுக