வருகை

ஒற்றைக் கால் ஓவியத்தை
சிதிலமடையச் செய்வது போல்
ஒலி ஒன்று கேட்டதனால்
சில்லென்று சிணுங்கும்
கொலுசு மணிகள் யாவும்
தேவதை நடப்பதாய்
சொல்லாமல் சொல்லியது.

தலைவியவள் தாழகற்றி
சுவரோடு சாய்ந்தபடி
ஏக்கத்தோடு எட்டிப் பார்த்தாள்
தலைவனவன் புன்சிரிப்பின்
மலர் பூவை மாலையாக்கி
கருங்காட்டு கூந்தலுக்கு
மணற் பரைத்து
நட்டு வைத்தாள்

தலைவனவன் வருகைக்கு
கொலுசு மணிகள் யாவும்
மெளனச் சிறை சேர்ந்ததென்ன?

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக