3

கவிதை

மொழியின் இனிமையை
உன் மூலம் காண்கிறேன்!

வார்த்தைகளால் அழகாய்
கோர்த்து வைத்த தோரணமாய்
செய்தி ஒன்று சொல்வதற்கு
வண்ணப் பூச்சுகளால்
இட்ட கோலம்
கவிதை

இளஞ் சுடரெரித்த பாலினிலே
சொட்டுச் சொட்டாய்
தேன் சேர்த்து
இனிக்க இனிக்க வந்து
தந்த சுவையினும் சுவையுடைய
என் உயிரென
நான் எண்ணும்
கவிதை
5

தோழி

புருவத்தின் கரையோரம்
திரை நீக்கும் நிமடம் முதல்
நான் காணும் கனவு வரை
உன்னிடத்தில் சரணடையும்.

இன்ப துன்ப நிகழ்வுகள் யாவும்
எனது வார்த்தைகளாய்
நின் மனப்பதிவிற்கு
செவியோடு சென்று சேரும்.

தோழியாய் நீ இருக்கையில்
எனது நிகழ்வுகள் யாவும்
உன்னைச் சுற்றி...

இவையனைத்தும்
உன்னிடம் சேராவிட்டால்
பாரங்கள் தாங்குவதில்லை
என் இதயம்.

என்னை விட்டுதூரம் சென்றாலும்
நினைவுத் தோட்டம்
உன்னோடு நான் பகிர
தினம் தினம்
பூ பூக்குமடி,
எந்தன் உயிர் தோழி...
2

அப்பா

நின் வரவைக் காணத்தான்
பிஞ்சு மனம் காத்திருக்கும்
அரைக் குமிழி உறக்கத்தில்
திரையசைத்துக் பார்த்திருக்கும்
அன்பெனும் பொழிவிற்கு ஏங்கித்தான்
தூக்கம் கலைய
நிலா முகம் இரசிக்கும்
அப்பா...
நின் வரவைக் காணத்தான்
இந்த
பிஞ்சு மனம் காத்திருக்கும்
3

சொர்கத்திலிருந்து பேசுகிறேன்

நிலாச் சோறு சாப்பிட
ஆசை கொண்டு
நின் வயிற்றில்
விதையானேன்...

நீ செய்த தவறெல்லாம்
பாவங்கள் என்றாகி
விதைக்குள் புழுவாய்
உயிர் குடைந்து
போனதடி...

என் நிலையறிந்து
தன் மனமுருகி
நிலவும் இன்று
கண் கசிந்து
கருத்துப் போனதடி...

உலகத்தை எட்டிப்
பார்க்கும் முன்னே
வேற்றுலகம் கடத்திவிட்டாய்.

உனை பிரம்மன் என்று
நான் நினைத்தேன்
எமனாய் நின்று
கருகளைத்த காரணம் என்ன?
0

புதைகுழி

பணமெனும் புதைகுழியில்
மனித உயிர் சுகம் காணுமோ?

அன்பும் அரவணைப்பும்
மனிதா நின் நிலைக் கண்டு
எட்டிப் பார்த்து
உனையெழுப்பி கொணர்ந்து
புதுவுலகம் காட்டுதடா!

நீ அதனையும்
உள்ளிழுத்ததனால்
மல்லிகை வாடை
துர்நாற்றத்தில்
வலுவிழந்து போனதடா!

நீ வெளியே வந்தாலும்
எந்தன் சிறு கண்ணீர் துளிகள்
நின் அழுக்கை களையாது
மனித மனங்களின்
மழை அன்று வேண்டுமடா
அன்பால் நீ நனைய

திருமணம்

தட்சனை வேண்டுமாம்
பெண்ணவள் வேங்கையின்
கை கோர்க்க

பூமகள் கோளத்தை
தவமிருந்து வளர்த்தவன்
பண இச்சை பரிமாற்றம் கேட்கும்
தரங்கெட்ட கூட்டத்திற்கு
உறவு சேர்த்து வைப்பதுவோ
திருமணம்