சொர்கத்திலிருந்து பேசுகிறேன்

நிலாச் சோறு சாப்பிட
ஆசை கொண்டு
நின் வயிற்றில்
விதையானேன்...

நீ செய்த தவறெல்லாம்
பாவங்கள் என்றாகி
விதைக்குள் புழுவாய்
உயிர் குடைந்து
போனதடி...

என் நிலையறிந்து
தன் மனமுருகி
நிலவும் இன்று
கண் கசிந்து
கருத்துப் போனதடி...

உலகத்தை எட்டிப்
பார்க்கும் முன்னே
வேற்றுலகம் கடத்திவிட்டாய்.

உனை பிரம்மன் என்று
நான் நினைத்தேன்
எமனாய் நின்று
கருகளைத்த காரணம் என்ன?

3 பின்னூட்டங்கள்:

ayashok சொன்னது…

sure my fav man.....
very touchable one

cheers
-ay

R A M E S H சொன்னது…

மனசுகுள்ள என்னமோ பண்ணுது...

பெயரில்லா சொன்னது…

Amazing da...
beautiful one....

கருத்துரையிடுக