காதல்

இரவு உறக்கம் இமையை நெருங்கும்
உன் நினைவுகள் யாவும்
அதனை எதிர்த்து நிற்கும்
பனித் துளிகள் சேர்த்து வைத்த
குளிர் கூட்டு வெண்ணிலவு
மனது மட்டும் உறக்கங் கேட்கும்
நினைவுச் சண்டையில்
உறக்கமெனும் சடலம்
தனக்குத் தானே தீ வைக்கும்
இவ்வுணர்வை என்னவென்று சொல்வேன்
காதலா இல்லை உறக்கம் சாதலா?

3 பின்னூட்டங்கள்:

Arni சொன்னது…

"kadhal" nu sonale alagu.. atharku innum alagu serthulathu ungal kavithai

பெயரில்லா சொன்னது…

very nice!

ayashok சொன்னது…

great one

கருத்துரையிடுக