நட்பிலக்கணம்

வெண் சுவரின்றி
வாய் பிளக்கும்
சிறு நகையும்
மொழி அறியாது
நா தெரிக்கும்
குறை வரியும்
குழந்தையிடம்
அழகு தான்

துன்பம் துயரம்
இன்பம் இடுக்கண்
இவையாவும்
அர்த்தநாரிப் பெண்
உன்னுடன் பகிர்வதும்
அழகு தான்

பிறப்பால் மலரும்
உறவுகள் இடையில்
மறைந்து மிளிரும்
அன்பு உருமாறி
மருவிய நட்பும்
அழகு தான்

உணர்வால் பிறக்கும்
தோழமைத் தேடி
திகைக்கக் கிடைக்கும்
நட்பே உருகி
மருவிய நட்பும்
அழகு தான்

3 பின்னூட்டங்கள்:

Arni சொன்னது…

very nice.... kethidatha varthaigal ungal kavithai...

பெயரில்லா சொன்னது…

Very nice kavidaihal vinoth

mohammed nazar சொன்னது…

ரொம்ப நல்லா இருக்கு

கருத்துரையிடுக