கனவு

விடியற் காலைப் பொழுது
கருவிழிப் பார்வைக் கதிர்கள்
ஊடுருவல் உரைந்த தருணம்
ஊரை விழுங்கிய பனிக்கோர்வை
குகைக்குள்ளே மறைந் திருந்த
தேவதையவள் வெளி யொளிர்ந்து
விரலால் மொழிப் பேசி
அருகிலே எனை யழைத்தாள்
தூரத்தில் அவள் இருக்க
எந்தன் தலை வருடல்
நான் உணர்ந் தெழுந்தேன்
வருடியதாய் உணர வில்லை
அன்பை யுணவாக்கி உண்டதாய்
கூறியது மனப் பசி
ஏனென்றால் வருடிய விரல்கள்
தாயின் ஐம் பரிவுகள்

2 பின்னூட்டங்கள்:

Arni சொன்னது…

Alagana karpanai...
arumaiyaana varthaigal.. vinothamana sinthanaigal...
rasikka vendiya kavithaigal....
intha kavithaium arumaiyaga ulathu

பெயரில்லா சொன்னது…

Alahana kavidhai

கருத்துரையிடுக