3

உயிரற்ற பூக்கள்

செடியில் உள்ள பூக்கள் யாவும்
உயிரற்று பிறக்கிறது
உன் கூந்தல் ஏறி நின்றி
உயிர் பெற்றுச் சிரிக்கிறது
நின் கூந்தல் வாடைக் கண்டு
பூக்கள் நாணி மடிகிறது
0

சூரியப் பெண்ணே

இலைத் தட்டு மனதின் மேலே
பனிக் கூட்டம் கூடு கட்டி
சூரிய வரவைப் பார்த்திருக்கும்
நினைவுகளே...

அவள் வரவைக் கண்டவுடனே
வண்ணத்துப் பூச்சிகளாய்
சிறகடித்துப் பறப்பதேனோ?

பனிக் கூட்ட குளிர்ச்சி விரட்டி
சூரியப் பெண் கதிர்கள் யாவும்
மழைச் சாரல் தெரித்தது போதும்!

என் மனமுரைந்து என்னவளே...
சூரியப் பெண்ணே நீ
நடுங்க வேண்டாம்!

என் இரத்த மொட்டுக்கள் வந்து
மனக் கூரைக்குள் வாழும் உன்னை
குளிர் துரத்தி வெப்பம் தரிக்கும்.
2

இனிமை

நிறமற்ற நீரும் உருமாறி
கருநிறம் கொண்டது

நிலாப் பெண் சிரிப்பினிலே
மேகங்கள் நாணமுற்று
கருத்துப் போனது

நிலவழகால் ஈர்க்கக் கண்டு
நிழலாடச் செய்து
நீரும் சலனப்பட்டது

மேகக் கருஞ் சாந்தை
மரமேனோ கடன் வாங்கி
மேனி கருத்து
உயிரற்று நிற்கிறது

தலையை இடைச் செருகிய
கால்களை அணைத்தபடி
கைகள் கோர்த்தமர்ந்தவாறு
நின் நினைவுகளோடு
நீரின் சலனத்தை கலைத்தபடி
மெளனமாய் நானிருந்து
நல்லிரவைக் கழிக்க வேண்டும்

என் துணையென
நீயில்லா இரவினிலே...

சில நேரம் பிரிவும்
இனிமை தான் பெண்ணே...