3

கானம்

இருளண்டிய மேகம்
தன் நுதலொடு
வெண்ணிற பொட்டுடுத்த
நிலவை ஒட்டும்
வேலை யதனில்
தன்மையனாய் மாறிய
மரம் ஈந்த
கானம் அதை
தனியனாய் உளவும்
இளங் காற்றரசன்
மெல்லியதாய் இசையுருக்கி
சலனத்தில் சுருண்டு
இடர்ப்பட்டுத் திரியும்
ஓடை நீரில்
இடைச் செருகி
இசை கரைக்கும்
3

தொடரும்...

கருங் குடை விரித்து
நிலவு தொங்கும்
ஒற்றைக் கண் மேகத்தின்
மேனி மணக்கச
வெள்ளிக் கற்கள் யாவும்
மின்னற் கீற்றாய்
விழியோரம் சிரித்து ஒளிரும்
நட்சத்திரக் கூட்டம்
பார்வையால் உள் ளிழுத்து
மனதோடு படரும்
எந்தன் கனவிலும் தொடரும்...

நாட் குறிப்பு

சூரியன் உதிர்ந்து
நிலவு குளிரும்
காலப் பொழுதில்
நினைவுகள் யாவும்
கவிதையாய் மாறி
ஆறாம் விரலாய்
கரம் தன்னில்
எழுதுகோல் பிறந்து
ஏட்டில் பதித்த
வரிகள் யாவும்
நின் முகத்தை
எந்தன் மனதோடு
வளர்பிறை யாக்கும்
0

அழகு மல்லி

குவிந்து உறங்கும் மல்லிகை
சூரிய விழியின் விடியலில்
இரவெலாம் படர்ந்த பனி
உருகுதல் கண்டு சிறகுகளாய்
தன் இதழ்கள் விரித்து
துயில் களையும் தோற்றம்
எங்கு காணினு மழகு