நாட் குறிப்பு

சூரியன் உதிர்ந்து
நிலவு குளிரும்
காலப் பொழுதில்
நினைவுகள் யாவும்
கவிதையாய் மாறி
ஆறாம் விரலாய்
கரம் தன்னில்
எழுதுகோல் பிறந்து
ஏட்டில் பதித்த
வரிகள் யாவும்
நின் முகத்தை
எந்தன் மனதோடு
வளர்பிறை யாக்கும்

1 பின்னூட்டங்கள்:

gaya3 சொன்னது…

Nalla kavidhai

கருத்துரையிடுக