இருவகை குழந்தையாம்
மலர்ந்த வாடை
சிறிதும் இழக்காது
பிறவி கண்டிருக்கும்
சிறு துளிரையும்
உயிர் துறக்கக்
காத்து கிடக்கும்
உடலுருகிய தொன்றையும்
வீதியோடு வாழவிட்ட
விழியழிந்த மூடர்கள்
இங்கே வேண்டாமே
நரகுல நாயகர்கள்
செழித்து வாழும்
வேற்றுலகம் கண்டெடுத்து
குழந்தை செல்வத்தை
துறந்து வாழும்
ஐயறிவு கொண்டு
அனாதை நாய்களாய்த்
திரியும் பேய்களைத்
துரத்துவோம் வருங்களேன்
2 பின்னூட்டங்கள்:
Alagana Sinthanaigal
எனது உணர்வோடு நீயும் பயணித்தாய் போலும்
நன்றி தோழியே
கருத்துரையிடுக