2

வலி

நான் என்றும் ஒற்றையனாய்
கரையோரம் மணல் மிதித்து
பாதம் குழியிட்டுச் சென்று
கடக்கும் வினாடி ஒவ்வொன்றும்
பாதம் பரைத்தக் குழியதனில்
நின்னைக் காணாத வலியதனை
ஒன்றாய் சேர்த்து சுவடுகளாய்
புதைத்து விட்டுச் செல்லும்
பேதை குணம் பாராட்டும்
உயிரற்ற என் மனது
4

என் காதல்

சூரியனின் மனக் குளிர்வை
அந்தி வானெங்கும் கொண்டாடும்
மஞ்சள் நிற மங்கையின்
புன்னகையோ என் காதல்
2

அந்தி வான் அழகியே

மெலிந்த பச்சைக் கொடியின்
மெல்லின இடை வருடி
மஞ்சற் குளியல் உண்டு
மணம் தெரிக்கும் பூவே...
மகுடியூதி நினை பரித்து
ஐவிரல் குதிரைப் பூட்டிய
தலைவனவன் கை யதனில்
தேவதையாய் நினை யேற்றி
பேதையவள் முக வீதியில்
உலாவர இச்சை கொண்டாயோ?
அந்தி வான் அழகியே!
15

தொப்புள் கொடி

மெல்லிய காற்றின்
அசைவில் நின்று
நாட்டியம் காணா
முதலுறவு காட்டிய
தொப்புள் கொடிதனை
தாயிடம் தானம் பெற்று
தன் யாக்கைத் திருகி
உயிரளித்த முதல் தோழிக்கு
உன் வேதனையில் பாதியை
பிறப்பால் தானமாய் இட்டாய்
22

உயிரிசை

ஒரு வாய் கொண்டு
ஈருயிர் பகிர்ந்து உண்ணும்
ஈரைந்து மாத உறவுக்கு
ஈடு இணை இவ்வுலகில்
எவறேனும் கண்ட துண்டோ

கருத்த அறை அதனில்
தாயவள் உடல் உரிஞ்சி
செங்காந்தற் மலர் மேலே
செந்தேன் தடவியது போல்
தன் உடல் தரித்து
தானறிந்த அழுகை யெனும்
நாதம் முழுங்கி உலகிற்கு
தன் வருகையை யறிவிக்கும்
இசை நிகழ்வை யுணர்ந்து
மனமகிழும் தாய் அவளின்
உணர்வுகளை உணர்ந்த துண்டோ