மழையெனும் தோழன்

மனதோடு வேர்விட்ட துயரம்
மரமாய் வளர்ந்து விழியோரம்
மரக்கிளை இலை யமர்ந்த
நிறமற்ற பனித் துளியாய்
கண்ணீர் வார்க்கும் தருணம்
மழையெனும் என் தோழன்
தொங்கற் நீர் தெரிப்பதற்குள்
விண் வேய்ந்த கூரையகற்றி
உப்பு நீரோடு உறவாடுவான்

3 பின்னூட்டங்கள்:

Arni சொன்னது…

Mazhayil nanaivathu inbam... ungal kavithaiyai padipathu perinbam.... alagana varigaluku sonthamana ungaluku ... valthukal...

வினோத்குமார் கோபால் சொன்னது…

நன்றி அர்னிதா!!!

உங்கள் அழகான வர்ணனையை கேட்பதும் இன்பம் தான்

காயத்ரி சொன்னது…

மிகவும் அழகிய கவிதை!பாராட்டுக்கள்!

கருத்துரையிடுக