4

வாழ்த்துக்கள்

பூ வொன்று பூத்து
பிறந்த நாள் எனும்
புது வருடம் காணுதாம்
மற்ற மொட்டுக்கள் யாவும்
இதழ் விரித்துச் சிரித்து
வாடைக் காற்றில் வீசுகையில்
மணம் இடைச் செருகி
வாழ்த் தொலிகள் கூறுதாம்

6

கவிப் பூக்கள்

எந்தன் எண்ணத்தில் பிறக்கும்
கவிப் பூக்கள் ஒவ்வொன்றும்
பொய்மையை யுறிஞ்சி புன்னகைக்கும்
என்னவளைப் புதுமையாய் போற்றும்
அழகியதாய் தன்னை மிளிர்க்கும்
நீர்த்தேக்க கார்முகில் குளிக்கையில்
வெள்ளி வட்டமாய் தோன்றிய
நிலா குமிழின் தோரணையையும்
மிஞ்சும் அதனழகையும் மிஞ்சும்
5

கனவுகள் கனவு காணும்

உன்னை நினைக்கும்
நொடியில் எல்லாம்
விழியும் மனதும்
விழித்தே இருக்கும்

நெஞ்சத்தின் ஓரம்
கனவுகள் மலரும்

உன்னை எண்ணிய
ஒவ்வொரு கனவும்
சின்னச் சின்ன
கனவுகள் காணும்
2

முகம் மலரும்

உன்னைப் பார்த்த
நாளி லெல்லாம்
சுகமான உறக்கம்
விழியோடு உருகும்

நினைவுகள் ஆசைகள்
இவை யாவும்
ஒன்றாய் சேரும்

இனிமையின் அமுதாய்
கனவுகள் மலரும்

கனவின் திரையில்
என்னவளே நிந்தன்
முகம் மலரும்
2

தவிக்க வைத்த தனிமை

விண் திரையில்
வெண்மை படர்ந்திருக்க
மூட்டங்கள் மறைத்தாலும்
எட்டிப் பார்க்கும்
நிலவிற்குத் தெரியும்
என் சோகம்

பூட்டி வைத்த
இருள் கொட்டகையில்
என்னைச் சுற்றி
பல நட்சத்திர
உறவுகள் இருந்தும்
நீயில்லா இரவு
வீணாகிப் போனதடி

நிலவைப் பார்க்கும்
ஒவ்வொரு கனமும்
நினைவுகள் யாவும்
ஒன்றாய் சேரும்
வெள்ளி நிலவிற்கு
கரு வண்ணம்
அள்ளிப் பூசும்