2

அனாதை

இருவகை குழந்தையாம்
மலர்ந்த வாடை
சிறிதும் இழக்காது
பிறவி கண்டிருக்கும்
சிறு துளிரையும்
உயிர் துறக்கக்
காத்து கிடக்கும்
உடலுருகிய தொன்றையும்
வீதியோடு வாழவிட்ட
விழியழிந்த மூடர்கள்
இங்கே வேண்டாமே
நரகுல நாயகர்கள்
செழித்து வாழும்
வேற்றுலகம் கண்டெடுத்து
குழந்தை செல்வத்தை
துறந்து வாழும்
ஐயறிவு கொண்டு
அனாதை நாய்களாய்த்
திரியும் பேய்களைத்
துரத்துவோம் வருங்களேன்
4

தாய்

விதையாய் விழுந்த எனை
உன்னில் புதையலாய் இட்டாய்

விதையதனில் துளிர் தெரிக்க
உதிரம் உருக்கி உரமாய்
எந்தனில் உயிர் ஊற்றினாய்

திங்கள் பத்து களைய
நின் வயிற்றுத் தொட்டிலெனும்
ஊஞ்சலில் எனை இட்டாய்

பெண் எனும் போர்வைக்குள்
சேய் பின்பு தாரமாகி
என்னுடையத் தாய் ஆனாய்

உன்னை பற்றி எண்ணியே
வியப்புற்றேன் என் தாயே
2

வைரம்

மலையிரண்டில் மையத்தில்
தலையெட்டிப் பார்த்திருக்கும்
விடியற்பொழுது நாயகனின்
சிரிப்பிற்கு ஒப்புமையோ
விரலெட்டிப் பார்க்கும்
மோதிரம் அமர்ந்த
விரல் கிளையின்
மேல் மலர்ந்த
வெண்குடை விரித்து
நின் விழி நோக்கும்
வைரக் கல்
4

நாட்டியம்

சிவந்த பாதங்களின் சுவறேறி
படர்ந்து சுற்றிய சலங்கையின்
ஒலி யுதிர்க்கும் முத்துக்கள்
ஒவ்வொன்றாய் கவி பாடும்
நின் நாட்டியப் பாதங்கள்
பூமி யெனும் வீணையை
சிவந்துச் சிவந்து மீட்டுவதால்