3

மழையெனும் தோழன்

மனதோடு வேர்விட்ட துயரம்
மரமாய் வளர்ந்து விழியோரம்
மரக்கிளை இலை யமர்ந்த
நிறமற்ற பனித் துளியாய்
கண்ணீர் வார்க்கும் தருணம்
மழையெனும் என் தோழன்
தொங்கற் நீர் தெரிப்பதற்குள்
விண் வேய்ந்த கூரையகற்றி
உப்பு நீரோடு உறவாடுவான்
3

கனவு கொழிக்கும் உறக்கம்

இரு வெண்ணிற வானில்,
காருவா நிலவு இரண்டும்,
கருத்த நூல் தொங்கற்...
இமையெனும், திரை மூடி
கனவினில், கண் விழிக்கும்!
இவையெலாம் நின் மடியில்,
விரல்களின் வருடலில் நிகழும்

ஈன்றவள் ஈட்டிய செல்வம்...
இனியதாய், கனவு கொழிக்கும்,
உறக்கம் அமைய வாழ்த்தும்!