4

விழிப்பாவை

பார்வையொளி படரவிடும்
கரும்பாவை நீக்கி
இருவிழிக்கொரு நிலவாய்
உனையமர்த்திப் பார்த்திருப்பேன்...

இமையே கூரையாய்
வேய்ந்து அரவணைக்க
வெண்ணிற வான்
நினைத் தாங்க
அமைதியின் பிறப்பிடமாய்
அன்பினால் அலங்கரித்து
என்றென்றும் வாழ்ந்திருப்பாய்
ஈன்றெடுத்த அன்னையே
7

பிறவிப் பயன்

எனை யுணர்நத பின்பும்
தாயவள் கயற் விழியின்
ஓரமாய் ஈரம் கண்டால்
நிந்தன் துயர் நீரேந்த
விழியோரம் விரல் சேரும்

ஏந்திய விழிநீர் யாவும்
உட்புகுந்த என் மனதோரும்
வெண்பனி படர் மலையென
குவிந்த துயர் என்றும்
குருதியில் கலந்து அரிக்கும்

இவை யெலாம் வேண்டுமோ
பிறவிப் பயனுறா மனிதா?

அருங்கடவுள் அன்னைக்கு
அன்பெனும் பூவினால்
நின் ஆயுட்காலம்
முடிவுரும் வரை
என்றென்றும் ஆற்றி
பயனுருவாய் மனிதா