4

தேனாய் ஊறியதே

அமுதாய் பொழியும்
அன்பின் நினைவால்
ஐவிரலில் தாழ்ந்தவனின்
தலையின் உச்சத்தில்
கருவிற் குயிரூற்றிய
தாயின் ஞாபகமெலாம்
உணவாய் ஏற்றி
வாயதனில் இட்டேன்
இட்டதெலாம் குழைந்து
தேனாய் ஊறியதே
2

அன்பின் அரணே

விழி உறங்கிடினும்
மறவாமல் எந்தன்
கால்களில் ஒன்றும்
கைகளில் ஒன்றும்
இயங்கா நிலையில்
உனை அணைக்கும்
அன்பின் அரணே
அன்னையே தாயே

வளர்பிறை

தேய்பிறைக் காணா
மனதோடு ஊறும்
மல்லிகையும் தோல்வியைத்
தழுவும் அன்பெனும்
இவளின் புன்னகையை
விழியின் துணையோடு
வார்த்தையால் கொணர்ந்து
காட்டும் அன்னையெனும்
திங்கற் பெண்ணிவளின்
அன்பிற்கு இவ்வுலகில்
உவமை உண்டோ
3

ஆலமரம்

எலும்புகள் தேய்ந்திடினும்
உடம்பொடு தலையும்
தொங்குதற் கண்டுவிடினும்
ஆலமரம் விழுதூன்றி
நின்றாற் போல்
கோலெனும் துணையதனை
கைகளிரண்டும் தேடிடினும்
தாயே எனக்காக
நிந்தன் யாக்கை
ஒருபோதும் ஓய்வறியாது
உழைத்தமைக் காண்