அமிழ்து!



பல நாட்கள்
வற்றிய சோற்றை
உண்டே களைத்துவிட்டேன்...

வெண் தயிர் கொண்டு,
பழைய சோறு குழைத்து,
ஊறுகாய் தொட்டு தரும்,
பிடி சோறு போதுமே....
அமிழ்து உண்டு களித்ததாய்
எந்தன் நினைவினில் தோன்றுமே...

தாயே!
நான் அமிழ்துண்ண வருகிறேன்...

6 பின்னூட்டங்கள்:

Arun சொன்னது…

Beautifully replicating the minds of people, who are living alone.

Nilavan சொன்னது…

பழைய சோறு கொண்டு
வெண் தயிர் குழைத்து ..
பிடிசோறு இட்டு ..
ஊறுகாய் தொட்டு ..

எனச் சீரணியாய் இருத்தல் நலம்..
மேலும்,

அமிழ்துண்டு களித்ததாய்
ஆனந்த நினைவுகள்
என்னில் தோன்றுமே..

என வார்த்தை ஜாலமும் ஏற்படுத்தலாம்.

கவிதை என்பது ஒவ்வொருவருக்கும் தனித்துவம் வாய்ந்தது தான். நான் கவிஞனல்ல, ஆனால் தேவைப்படுகின்ற இடங்களில் தாராளமாய் உபயோகிக்கலாம்.

வினோத்குமார் கோபால் சொன்னது…

அன்னையின் அன்பும் பாசமும் கலக்கப்படாமல் காய்ந்து கிடக்கும் உணவை நான் இங்கு வற்றிய சோறு என்று குறிப்பிட்டுள்ளேன்

surya சொன்னது…

thaimaiyai evalavu alagagavum miga alithaga padipavargal purium patium, varthaiyaga vaditha vitham arumai..........kavuithai padithathum en thayai nan parkum parvai marupatu ponathu nanba.

Venky சொன்னது…

அமிழ்து அருமை... இது தாயின் பெருமை...

MAGESH KUMAR சொன்னது…

un kavidhaiyaal ennai meendum amizhdhu unna vaithu vittai.

கருத்துரையிடுக