குரல்



எங்கோ ஓர் இடத்தில்
நீ இன்றி தனியனாய்,
உந்தன் நினைவுகளோடு
உறவாடி நான் இருக்க...
அழகாய் நீ அனுப்பும்
குரல் மட்டும் கேட்கிறதே...

தாயே உன்னை நான்
பிரிந்து வாழும் காலம்
சிறிது தான் என்றாலும்...

பிரிவு கொடியதாய்
தோன்றுவதன் காரணம்
நின் அன்பு
என்பதை மட்டும்
நான் அறிவேன் தாயே...

1 பின்னூட்டங்கள்:

பெயரில்லா சொன்னது…

Perfect.

~Anamika

கருத்துரையிடுக