5

அமாவாசை நிலவுகள்



விரல் எட்டிப் பார்க்கும்,
நகக் கண்களை வெட்டி,
மண்ணிற்கு தானம் வார்த்து,
வீணடித்தது போதும் பெண்ணே...

இம்முறை அவற்றை எல்லாம்,
தானமாய் என்னிடம் கொடுத்துவிடு.
வெண்ணிலவு இல்லா நாளன்று,
கார் வண்ண மேகத்தில்,
பொங்கும் வெள்ளிப் புன்னகைகளாய்!
வெள்ளிப் பிறை நிலவாய்!
நின் நகங்களை யாவும்,
அனுப்பி வைக்க எண்ணுகிறேன்.
6

இனியதாய் ஒரு உறக்கம்


நிறம் காய்ந்து உயிர் காயாத,
விரல்கள் என்னும் நரம்புகள் ஓடும்...
பூவாய் மலர்ந்த கைகளைக் கொண்டு,
உன் மடியில் நான் உறங்க...
எந்தன் தலை கோதுவாய் பெண்ணே!