2

என்று பிறந்தாய்?



என்னுள்ளே பிறந்து,
நானறியாமல் வளர்ந்தவளே...
என்னவளை கண்டதும்
முகத்தை மறைத்தவளே...
வெட்கத்தை மட்டும்
வஞ்சனை ஏதுமின்று
வாரி இரைத்தவளே...
அவளது பார்வையால்
சொடுக்குப் போட்டு
அழைத்ததும் சென்றுவிட்டாய்...

என் காதலே
நீ எப்போது
என்னுள்ளே துளிர்விட்டாய்?
5

ஆயிரம் அழகுகள்


பிள்ளையின் சிரிப்பில்
ஆயிரம் பருக்கைகள்
உண்டதாய் எண்ணுவாய்...

புரியா பிதற்றலில்
ஆயிரம் அர்த்தங்கள்
கண்டதாய் அறிவாய்...

விழியில் மையிட்டு
நுதற் பொட்டிட்டு
ஆயிரம் ஓவியங்கள்
ஒன்றாய் கண்டதாய்
ஆச்சரியத்தில் கொஞ்சுவாய்...

கன்னங்கள் கிள்ளி
அழகாய் கொஞ்சி
வருடி முத்தமிடுவாய்...

இவைகளை எண்ணியே
எந்தன் மனமின்று
பிள்ளையாய் மாறியதே
இவையெல்லாம் என்னைத்
தொட்டிலிட்டு தாலாட்டியதே
4

மீண்டும் பள்ளிக்கு போகலாம்...


உறங்காமல் கண் விழித்த நாட்கள்,
அயர்ந்து சுவரோடு சாய்ந்த நாட்கள்,
புத்தகத்தில் முகம் தொலைத்த நாட்கள்,
எழுது கோள்களுடன் பேசிய நாட்கள்,
நட்பு சகாக்களுடன் நகையாடிய நாட்கள்,
தாய் மடி தேடிய நாட்கள்,
இவ்வாறு...
கடந்த நாட்களைத் திரும்பிப் பார்த்திடினும்,
எண்ண ஏட்டுக்களை புரட்டிப் பார்த்திடினும்,
என்று வரும் இந்த சுகம்?
மீண்டும் பள்ளிக்கு போகலாம்...