4

அன்பை என்வென்று சொல்ல?



மலர்ந்த முல்லை,
புற்களின் பனித்துளி,
தெரிக்கும் மழைத்துளி,
யாழின் இசை,
பைந்தளிர் கொடி,
காற்றின் கீதம்,
சங்கின் நாதம்,
நிலவின் ஒலி,
தெளிந்த நீர்,
அரிய அமுதம்,
பிள்ளையின் பார்வை,
மழலைச் சிரிப்பு
இவை யாவையும்
தூயதாய் கண்டால்
எந்தன் தாயே
நின் அன்பை
என்வென்று சொல்ல?
6

பதிவுகள்



கடற்கரை மணலிலும்,
காய்ந்த மரத்திலும்,
தேர்வு காகிதத்திலும்,
பச்சை இலைகளிலும்,
ஓடும் நீரிலும்,
வெந்நிற சுவற்றிலும்,
உலவும் காற்றிலும்,
உந்தன் மனதிலும்,
சின்னஞ்சிறு ஓவியங்களாய்...
நீ பதித்த
எனது பெயர்கள்...