நானும் கவிஞன்...



பூக்களும் சிரிக்கும் என்று
அறியாது இருந்து விட்டேன்...
நின் புன்னகை மலர்ந்ததில்
அதனை உணர்ந்து கொண்டேன்!

கருஞ்சாந்தாய் நீர்வீழ்ச்சி
இருந்ததும் அறியவில்லை...
நின் கார்குழலை
வருடும் வரை!

கால்களுக்கும் ஈர்ப்பு விசை
இருக்கும் என்று தெரியவில்லை...
நான் உன்னை நோக்கி
விரைவாக நடக்கும் வரை!

உறக்கத்தையும் சிறை பிடிப்பாய்
என்று ஒருபோதும் அறியவில்லை...
எந்தன் கனவுகளில்
நீ நிறையும் வரை!

நானும் கவிஞன் என்று
நானே நம்பவில்லை...
இந்த கவிதையை
எழுதும் வரை!!!

6 பின்னூட்டங்கள்:

Deepa சொன்னது…

so sweet...

bags சொன்னது…

excellent kavithai

Unknown சொன்னது…

oh god great

anbu சொன்னது…

vazhthukal.. thozha... ungalathu kavithaigalil manakkum thamizh ennai mayakki vittathu poangal.. arumai..

பெயரில்லா சொன்னது…

nice one :)

Viji சொன்னது…

I really enjoyed ur kavithai vinoth

கருத்துரையிடுக