இப்படிக்கு பசுமை - 1



மரகதப் பச்சையை
மேனியில் கொண்ட
அழகிய மயிலும்
இன்று நிறமற்று
வருந்தி உலவுவதேன்?

கண்களை கொள்ளை கொள்ளும்
வயல்களும் பசுங்குழல் உதிர்த்து
வெண்மையாய் காய்த்து கிடப்பதேன்?

கறை தொட்டுத் திரிந்த
சீற்றமிகு கடல் அலைகளும்
வெகு தூரம் சென்று
கறை காணாது இருப்பதேன்?

நீரின்றி அமையா இவ்வுலகு
இன்று...
குடிநீருக்காக அலைவது ஏன்?

இவைகளுக்கு விடை கிடைத்தால்
வெகு நாட்கள் வாழ்ந்திருப்பேன்...

இப்படிக்கு,
பசுமை

3 பின்னூட்டங்கள்:

Deepa சொன்னது…

True lines!!! :) So nice....

பெயரில்லா சொன்னது…

Wonderful...

~Anamika

CHARLES சொன்னது…

nice line anna....,

கருத்துரையிடுக