எங்கே இருக்கிறாய்?


மொட்டு விரியா,
மல்லிகையை பரித்து,
கருஞ் சாந்திட்டு,
மலர்ந்ததுள்ள,
நின் கண்களும்...

நீர் பகைமை கொண்டாலும்,
நீரோடு உறவாடும்...
அழகிய புன்னகையொடு,
தேன் தமிழ் பயின்ற...
தாமரையாய் தோன்றும்,
நின் இதழ்களும்...

மழை ஓய்ந்த,
வெளிர்ந்த வானில்...
சிவந்த சூரியனாய்,
தழல் தெரிக்கும்...
நீ இட்ட,
நுதற் பொட்டும்...

என்னை ஒவ்வொரு கனமும்,
வா என்றே அழைக்குதடி...
ஆனால் பெண்ணே நீ,
என் அருகில் இல்லையடி...

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக