எத்தனை அழகு?



சன்னதியில் பெற்ற,
குங்குமத்தை கையில் ஏந்தி,
நெற்றியில் இட்டு,
கோவிலைச் சுற்றி வந்து,
கடவுளை காணும்...
செய்கை அழகு!

கோவிலைச் சுற்றி,
நடக்கும் போது...
உந்தன் பாதம் சுற்றி,
நடனமாடி சிரிக்கும்,
சரிகை வேய்ந்த,
புடவையும் அழகு!

மெளனத்தாலும்,
கண்களாலும்,
மனதாலும்,
உந்தன் புன்முறுவலாலும்,
கடவுளிடம் பேசும்...
பாவனையும் அழகு!

4 பின்னூட்டங்கள்:

Deepa சொன்னது…

உங்கள் கவிதைக்கூட அழகு!!! :)

வினோத்குமார் கோபால் சொன்னது…

உங்களது பாராட்டும் அழகுதான்

Venky சொன்னது…

அழகோ அழகு...

எஸ்.கே சொன்னது…

அழகான சுவையான கவிதை!

கருத்துரையிடுக