என்ன செய்யப் போகிறாய்?



விழிகளுக்குள் மறைத்து வைத்த,
கருங் காந்தம் கொண்டு,
எந்தன் கண்களை எப்போதும்,
இடைவிடாது ஈர்த்துக் கொண்டிருக்கிறாய்...

ஈர்க்கப்பட்ட விழிகளைக் கொண்டு,
உந்தன் கண்களைத் தவிர,
எதையும் காண இயலாது,
மந்திரமும் செய்து விட்டாய்...

இன்னும்...
என்ன செய்யப் போகிறாய்?

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக