அழகாக...



ஒரு நாள்,
கடற்கரை ஓரம்,
வந்து செல்லாமல்,
நின்ற அலையாய்,
நானும் அவளும்...
பார்வையால் மட்டும்,
காதல் செய்துகொண்டிருந்த நேரத்தில்,
"எது அழகு?" என்றாள்.

சிறு புன்னகையோடு,
"அழகு என்னும் வார்த்தைக்கு,
அர்த்தம் எதுவும் இல்லையடி...
மனதிற்கு பிடித்ததெல்லாம்,
அழகு என்றானதடி...", என்றேன்.

மீண்டும்...
"உங்களுக்கு எது அழகு?",
என்றாள்.

"அழகே என்னிடம்,
'எது அழகு?',
எனக் கேட்டால்,
பதில் ஏதும்,
சொல்லத் தோன்றுமோ?",
என்றேன் அழகாக...

படர்ந்தன வெட்கங்கள்,
மீண்டும் அழகாக...

2 பின்னூட்டங்கள்:

எஸ்.கே சொன்னது…

அழகான கவிதை! அருமை! அருமை!

Venky சொன்னது…

அழகு.. அழகு.. அழகு..

கருத்துரையிடுக