4

ஊமை பொம்மைகள்



என்ன அதிசயம் செய்தாயடி?
என்னை சுற்றியிருக்கும்...
உருவங்கள் யாவும்,
பொம்மைகளாய் தெரியுதடி...
என் அருகில்,
நீ இருந்தால்...

என்ன அதிசயம் செய்தாயடி?
என்னை சுற்றியிருக்கும்...
பொம்மைகள் யாவும்,
ஊமையாய் போனதடி...
சிரித்து புன்னகைத்து,
நீ பேசினால்...

என்ன அதிசயம் செய்தாயடி?
என்னை சுற்றியிருக்கும்...
ஊமைகள் யாவும்,
உவமையாய் போனதடி...
கன்னத்தை கிள்ளி,
நீ கொஞ்சினால்...


என்ன அதிசயம் செய்தாயடி?
என்னை சுற்றியிருக்கும்...
உவமைகள் யாவும்,
உருகியே போனதடி...
எனக்காக நீ தந்த,
அழகான முத்தத்தால்...
0

நிழல்



என்னுடன் வரும் நிழலை,
எனதென்று நினைத்திருந்தேன்...
எனக்காக நீ அனுப்பிய,
நினைவுகள் என்று,
இன்று தான் உணர்ந்தேன்...
உந்தன் பிரிவில்
0

எங்கே இருக்கிறாய்?


மொட்டு விரியா,
மல்லிகையை பரித்து,
கருஞ் சாந்திட்டு,
மலர்ந்ததுள்ள,
நின் கண்களும்...

நீர் பகைமை கொண்டாலும்,
நீரோடு உறவாடும்...
அழகிய புன்னகையொடு,
தேன் தமிழ் பயின்ற...
தாமரையாய் தோன்றும்,
நின் இதழ்களும்...

மழை ஓய்ந்த,
வெளிர்ந்த வானில்...
சிவந்த சூரியனாய்,
தழல் தெரிக்கும்...
நீ இட்ட,
நுதற் பொட்டும்...

என்னை ஒவ்வொரு கனமும்,
வா என்றே அழைக்குதடி...
ஆனால் பெண்ணே நீ,
என் அருகில் இல்லையடி...
3

அந்தரத்தில் குதிக்குதடி மனது



என்னை இழுத்துக் கொண்டு
அந்தரத்தில் குதிக்குதடி மனது...
அழகாய் குடை விரிக்கும்
உன் தாமரை இதழ்களால்...
ஈர்ப்பு விசையறியாது உதிர்க்கும்
உன் சின்னஞ்சிறு புன்னகையால்...
வண்ணமறியாது மலரும்
உன் கன்னக் குழியால்...