எத்தனை தவம் செய்தாய்?


இதழ் விரியா மலர் போல,
விரல்கள் குவிந்த இரு கைகளையும்...
மெளனமும் மொழியும் அரியா,
அழு குரல் அறிவிப்பையும்...
எங்கும் காணா அழகை குவித்த,
களங்கம் இல்லா முகத்தையும்...
விரிந்த மலருக்குள்,
மொட்டாய் முளைத்திருக்கும்,
விழி இரண்டினையும்...
மண்ணோடு கவி பாடாத,
மலர் போன்ற பாதங்களையும்...
முதல் காட்சியாய் காண,
எத்தனை தவம் செய்தாய்?

1 பின்னூட்டங்கள்:

Ramanujam சொன்னது…

arumai arumai...uyir sottum suvai...aga alamana arthangal

கருத்துரையிடுக