3

பொம்மைகள்!


வானில் தெரியும் நிலவும்,
தெருவில் திரியும் நாயும்,
ஓரமாய் உறங்கும் பூனையும்,
தாடி வைத்த பூச்சாண்டியும்,
பக்கத்து வீட்டு பாப்பாவும்,
மின்னிக்கொண்டு போகும் வானூர்தியும்,
நான் உணவு உண்ண,
நீ காட்டும் பொம்மைகள்!

2

கொஞ்சலின் ஆனந்தம்!


நீ கொடுக்கும்,
முத்தங்களை எல்லாம்,
அன்பின் அடையாளமாய்,
தினம் தினம்,
மனதில் சேமிக்கிறேன்!

நீ என்னை,
கொஞ்சும் தருணத்தில்,
மொத்தமாய் தந்துவிடுகிறேன்!

ஆகையால்...
தாயாக நீயும்,
சேயாக நானும்,
கொஞ்சலின் ஆனந்தத்தை,
ஒன்றாக இரசிக்கிறோம்!
2

நன்றிகள்!


கண்ணீர் துடைக்கும் கைகளுக்கும்,
சாய்ந்து உறங்கும் தோள்களுக்கும்,
அன்போடு முத்தமிடும் இதழ்களுக்கும்,
நடை பழக்கிய விரல்களுக்கும்,
இத்தனை செய்தும்,
ஏதும் அறியாத பிள்ளையைப் போன்றே...
அமைதியாய் இருக்கும் உனக்கும்,
உன்னை தாயாய் தந்த இறைவனுக்கும்,
ஆயிரம் ஆயிரம் வார்த்தைகளால் நன்றிகள்!
2

புண்ணியம்


நான் விளையாடும் பொழுது,
என்னுடன் நீயும் விளையாடுகிறாய்!
நான் சிரிக்கும் பொழுது,
என்னுடன் நீயும் சிரிக்கிறாய்!
நான் அழும் பொழுது மட்டும்,
என்னுடன் சேர்ந்து அழாமல்,
நீ ஏன் பதரிப்போகிறாய்?

உன்னை தாயாய் பெற்றதனால்,
புண்ணியம் கோடி கண்டேன்!
2

பட்டியல்


கரு முளைத்த கனமே,
கண்களுக்குள் ஆயிரம் கனவுகள்!
மனதிற்குள் ஓராயிரம் பெயர்கள்!
ஆண் பிள்ளைக்கும்,
பெண் பிள்ளைக்கும்,
தனித்தனியே பட்டியலிட்டு,
யோசித்துக் கொண்டிருக்கிறாய்!

பெண்ணே...
அன்பும் ஆசையும்,
கலக்கும் தருணம்,
இதுதானோ?

இணையேதும் இல்லை...


கைகளையும் கால்களையும்,
உதைத்துக் கொண்டே,
அழகாக சிரிக்கும்,
தவழுதலும் அறியாத,
சின்னஞ்சிறு பிள்ளையை,
கைகளில் ஏந்தி...
தோலோடு சாய்த்து...
தட்டிக் கொடுத்து,
தூங்க வைக்கும்...
தாயின் அன்பிற்கு,
இணையேதும் இல்லை!

பேரின்பம்...


கரு தரித்த பின்,
பத்து மாதங்கள் பொறுமையாய்,
கருவறையில் உருவம் தீட்டி,
உயிரும், உணவும் கொடுத்து,
பிள்ளைப் பேறு காண்பது,
தாய்க்கு இன்பத்திலும் பேரின்பமே...
0

தாலாட்டு...


கடலையில் குளியலிட்டு,
சாம்பிராணில் மேனி உளர்த்தி,
கருவேலம் மை கொண்டு,
நெற்றியிலும்... கன்னத்திலும்...
அழகாக பொட்டு வைத்து,
சேலையில் தொட்டி கட்டி,
இளம்பிள்ளையை உறங்க வைக்க,
தாலாட்டு நீ பாடுகையில்,
ஊரே உறங்கி போனதம்மா!

வருடல்


இரவின் குளிரோசையை உணர்த்தும்,
நதியின் நீரை திருடி...
நிலவின் சின்னத் துண்டுகளோடு,
பாலில் கரைத்த முல்தானி இட்டு...
கரைத்த மிருதுவான கலவையை,
மயிற் பீலி கொண்டு,
முகம் வருடுதல் போன்றே...
பிள்ளையில் கரங்களைக் கொண்டு,
அன்னை தன் முகம் வருடுதலும்,
மென்மையாம்!