நன்றிகள்!


கண்ணீர் துடைக்கும் கைகளுக்கும்,
சாய்ந்து உறங்கும் தோள்களுக்கும்,
அன்போடு முத்தமிடும் இதழ்களுக்கும்,
நடை பழக்கிய விரல்களுக்கும்,
இத்தனை செய்தும்,
ஏதும் அறியாத பிள்ளையைப் போன்றே...
அமைதியாய் இருக்கும் உனக்கும்,
உன்னை தாயாய் தந்த இறைவனுக்கும்,
ஆயிரம் ஆயிரம் வார்த்தைகளால் நன்றிகள்!

2 பின்னூட்டங்கள்:

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

சூப்பர்...

மேனா சொன்னது…

தோழரே!!!
ஆக்கங்கள் அற்புதம். அதிலும் நிழற்பட பின்னணி கவிதைக்கு மெருகூட்டுகிறது...

கருத்துரையிடுக