எத்தனை எத்தனை கோலங்கள்...


தாயின் கருவில் உயிராகவும்,
அழுது பிறந்த பிள்ளையாகவும்,
தத்தித் தவழும் மழலையாகவும்,
உடன் பிறப்பிற்கு சகோதரியாகவும்,
நட்பிற்கு உற்றத் தோழியாகவும்,
இல்லறம் புகும் மனைவியாகவும்,
மணவாளனை ஈன்றவளுக்கு மகளாகவும்,
பிள்ளைபேறு பெற்று தாயாகவும்,
எத்தனை... எத்தனை... கோலங்கள் காண்கிறாய்,
பெண்ணே!

1 பின்னூட்டங்கள்:

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

பெண்ணின் வாழ்க்கை வட்டத்தை கோலமிட்டுள்ளீர்கள் சுப்பர்

கருத்துரையிடுக