முதல் காதல்!


கரை அறியா கனவுகளும்,
உன்னை எண்ணியே மலர்ந்தன!
கனவுகளில் வாழ்தலும்,
உன்னுடனே நடந்தன!
ஆயிரம் ஆசைகளும்,
ஆயிரம் முத்தங்களும்,
உனக்காகவே பிறந்தன!

என்னுடைய...
முதல் காதலின்,
உன்னுடைய மறுப்பால்,
இவை யாவும்,
வேறோடு மடிந்தன...

1 பின்னூட்டங்கள்:

Venky சொன்னது…

வேர் சாய்ந்த காயம் காய்ந்திட காலம் ஆகும்!!!

கருத்துரையிடுக