இன்பத்திலும் பேரின்பம்!


பண்பட்ட நிலத்தை,
பயனுற விதைத்து,
நெடுக வளர்ந்து,
எட்டிப் பார்க்கும்,
நெல்மணிகளைக் காணுதல்,
விதைத்தவனுக்கு இன்பம்!

அதைப் போன்றே...
பண்பட்டு வளர்ந்த,
பிள்ளையை காண்பது,
ஈன்றவளுக்கு...
இன்பத்திலும் பேரின்பம்!

2 பின்னூட்டங்கள்:

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

realy super

மேனா சொன்னது…

ஈன்றாளின் தவம் அன்றோ அது......

கருத்துரையிடுக