அதிர்வு மொழி...


அன்போடு உதிர்க்கும்,
வார்த்தைகள் மட்டுமே,
காற்றை களைக்கும்,
அதிர்வு மொழியை,
முழுவதுமாய் கற்றிருக்கிறது!

மற்றவர்கள் உதிர்க்கும்,
அன்பில்லா வார்த்தைகள்,
காற்றில் கரைந்து,
ஒலி இழப்பதால்...
நீ இல்லாத,
ஒவ்வொரு நொடியும்,
மெளனம் மட்டுமே,
என்னை சூழ்கிறது!

1 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக